ரயில்வே பாணியில்.. தமிழக அரசு விரைவு பஸ்களில் தட்கல் டிக்கெட்.. டிக்கெட் புக் செய்ய செல்போன் 'ஆப்'
சென்னை: தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்துகளில் தட்கல் டிக்கெட் முன்பதிவு முறை அறிமுகம் செய்யப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சட்டசபையில் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசியபோது அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்:

சாலைகளில் வேகமாக செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து நட வடிக்கை மேற்கொள்ள வசதியாக 10 சரகங்களுக்கும் ரூ.95 லட்சம் செலவில் அதிவேகம் கண்டறியும் கருவிகள் வழங்கப்படும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக மோட்டார் வாகன பராமரிப்புத் துறையின் கீழ் இயங்கும் திருச்சி, மதுரை, சேலம் ஆகிய இடங்களில் உள்ள தானியங்கி பணிமனைகளில் அம்மா ஓட்டுநர் பயிற்சி நிறுவனம் தொடங்கப்படும்.
ஒவ் வொரு போக்குவரத்து கழகத்தில் இருந்தும் ஆண்டு முழுவதும் விபத்தினால் உயிரிழப்பு ஏற்படுத் தாத பணிமனை ஒன்று தேர்ந் தெடுக்கப்பட்டு அதற்கு ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
அவசர வேலை காரணமாக உடனடியாக பயணம் மேற் கொள்ள வேண்டிய பயணிகளின் வசதிக்காக, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மற்றும் இதர அரசு போக்குவரத்துக் கழகங்களின் நெடுந்தூர பேருந்து களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படும். இந்த முறையில் பேருந்து ஒன்றுக்கு 4 இருக்கைகள் ஒதுக்கப்படும்.
மேலும், அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நெடுந்தூர பேருந்துகளுக்கு செல்போன் ஆப் வழி டிக்கெட் முன்பதிவு செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். அதெல்லாம் ஓகே, பிற மாநிலங்களை ஒப்பிட்டால் தமிழக அரசு பஸ்கள் எல்லாம் பாடாவதியாக போய்விட்டதே புது பஸ்கள் வாங்குவது குறித்து ஏன் கூறவில்லை என்பதுதான் பொதுமக்கள் கேள்வி.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications