எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை.. உனக்கு இரண்டு கண்ணும் இருக்கக் கூடாது.. தினகரன் அதிரடி!!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை.. உனக்கு இரண்டு கண்ணும் இருக்கக் கூடாது.. தினகரன் அதிரடி!!

    சென்னை: இரட்டை இலையை நிரந்தரமாக முடக்க வேண்டும் என்று தினகரன் தரப்பு கூறியிருப்பது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சி அலைகளை பரப்பியுள்ளது. தனக்கு கிடைக்காமல் போனால், யாருக்குமே இரட்டை இலை கிடைக்காத நிலையை உருவாக்க வேண்டும் என்பதே தினகரன் தரப்பின் திட்டமாக தெரிகிறது.

    இரட்டை இலை தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது. தற்போது தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ள இரட்டை இலையைத் திரும்பப் பெற ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணியும், தினகரன் அணியும் மோதி வருகின்றன.

    ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. அதன் பின்னர் ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்தன. தினகரன் தனித்து விடப்பட்டார்.

    இரட்டை இலையை முடக்கக் கோரிக்கை

    இரட்டை இலையை முடக்கக் கோரிக்கை

    நேற்று இரட்டை இலை தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் வந்தபோது தினகரன் தரப்பில் ஆஜராகி வாதாடிய முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமார், இரட்டை இலை சின்னத்தை நிரந்தரமாக முடக்க வேண்டும் என்று வாதிட்டு அனைத்துத் தரப்பையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

    பட்டி தொட்டியெங்கும் இரட்டை இலை

    பட்டி தொட்டியெங்கும் இரட்டை இலை

    எம்ஜிஆரின் சின்னமாக கருதப்படும், தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் மக்களின் மனங்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று ஜஸ்ட் லைக் தட் தினகரன் தரப்பு கூறியிருப்பது நீண்ட கால அதிமுக விசுவாசிகளை அதிர வைத்துள்ளது.

    யாருக்கும் சின்னம் கிடைக்கக் கூடாது

    யாருக்கும் சின்னம் கிடைக்கக் கூடாது

    தனக்கு கிடைக்காவிட்டால் இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்கக் கூடாது என்பதே தினகரன் தரப்பின் திட்டமாக தெரிகிறது. அதாவது தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும் என்ற எண்ணம்தான் தினகரன் தரப்பின் இந்த வாதத்திற்குக் காரணம் என்று சொல்கிறார்கள்.

    தினகரன் தரப்பின் கோரிக்கைக்குக் காரணம்

    தினகரன் தரப்பின் கோரிக்கைக்குக் காரணம்

    புதுக் கட்சித் திட்டத்தில் தற்போது தினகரன் இருக்கிறார். அதிமுக தனக்கு சாத்தியப்படாமல் போனால் புதுக் கட்சி தொடங்குவதே அவரது திட்டமாக உள்ளது. அலுவலகத்திற்கு இடம் கூட பார்த்து வருகிறார்கள். இந்த யோசனைதான், இரட்டை இலையை முடக்கும் கோரிக்கைக்கு பின்னால் இருப்பதாக சொல்லப்படுகிறது.

    சின்னத்தை முடக்குமா தேர்தல் ஆணையம்

    சின்னத்தை முடக்குமா தேர்தல் ஆணையம்

    அதேசமயம், இந்தக் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவர்களின் வாதத்தை தேர்தல் ஆணையம் பதிவு செய்துள்ளதால் சலசலப்பும் ஏற்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தில் யாருக்கு பாதகமாக தீர்ப்பு வரப் போகிறது என்ற பதைபதைப்பில் தற்போது அதிமுகவின் இரு அணிகளம் உள்ளன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+