டெல்லி பிரதிநிதி, அட்வகேட் ஜெனரல்... எந்த பதவியுமே கிடைக்கலையே... புலம்பும் ஓபிஎஸ் குரூப்
அணிகள் இணைப்புக்குப் பின்னர் தங்களுக்கு பதவிகள் கிடைக்கும் என எதிர்பார்த்த ஓபிஎஸ் அணி தலைவர்கள் அதிருப்தியில் இருக்கின்றனராம்.
Recommended Video

சென்னை: அதிமுகவின் எடப்பாடி அணியுடன் இணைந்த பின்னர் எதிர்பார்த்த எந்த ஒரு பதவியுமே தங்களுக்கு கிடைக்கவில்லை என புலம்பி வருகிறது ஓபிஎஸ் அணி என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈபிஎஸ் அணியுடன் இணைந்த நிலையில் துணை முதல்வரானார் ஓபிஎஸ். மாஃபா பாண்டியராஜன் அமைச்சராகிவிட்டார். அதேநேரத்தில் ஓபிஎஸ் அணியில் தலைவர்கள் பலரும் பதவியை ரொம்பவே எதிர்பார்த்திருந்தனர்.

டெல்லி பிரதிநிதி
குறிப்பாக டெல்லிக்கான தமிழக பிரதிநிதி, குடிநீர் வாரியம், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பதவி ஆகியவற்றைத்தான் ஓபிஎஸ் அணி தலைவர்கள் குறிவைத்தனர். ஆனால் டெல்லி பிரதிநிதி பதவி நிச்சயம் கிடைக்காது என்ற சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் ராஜ்யசபா எம்.பியும் மாஜி அமைச்சரும் ரொம்பவே ஏமாந்துவிட்டனராம்.

மத்திய அமைச்சர் பதவி
இதையடுத்து மத்திய அமைச்சர் பதவியை எப்படியும் வாங்கிவிடுவது என ராஜ்யசபா எம்.பி. ரொம்பவே மெனக்கெட்டு லாபி செய்திருக்கிறார். அதுவும் கிடைக்காமல் போக ஏக வருத்தத்தில் இருக்கிறாராம். அதேபோல் டெல்லி பிரதிநிதிதான் கிடைக்கலை.. குடிநீர் வாரியம் வாங்கிதாங்க என ஓபிஎஸ்ஸை நெருக்கியிருக்கிறார் மாஜி அமைச்சர்.

அட்வகேட் ஜெனரல் பதவி
இப்போதைக்கு எதுவும் வேண்டாங்கண்ணே... என எடப்பாடி தரப்பு நழுவ 'வட போச்சே...' என வதங்கி போயிருக்கிறாராம் மாஜி. தென்மாவட்டத்துக்காரருக்கு தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பதவி மீது குறி. இதற்கேற்ப அட்வகேட் ஜெனரல் முத்துக்குமாரசாமி ராஜினாமா செய்ய ரொம்பவே நம்பிக்கையாக இருந்திருக்கிறார்.

டெல்லி உத்தரவால்..
ஆனால் டெல்லி உத்தரவில் சென்னை பிரமுகருக்கு நெருக்கமானவருக்கு அந்த பதவி போய்விட்டது... இதில் தென்மாவட்டத்துக்காரர் ரொம்பவே அப்செட்டாகிவிட்டாராம்... அதேபோல் மலைக்கோட்டை மாவட்டத்துக்காரரும் வாரியம் ஏதாவது ஒன்றை வாங்கித் தாங்க... மாவட்டத்தில் மதிப்பா இருக்கும் என சொல்லிப் பார்த்திருக்கிறார்... ஆனால் எதுவும் நடக்கவில்லை. இப்படி ஓபிஎஸ் அணியில் உள்ள ஒவ்வொரு தலைவரும் பதவிக்காக இலவு காத்த கிளியாக இன்னமும் காத்து கொண்டே இருக்கிறார்களாம்.












Click it and Unblock the Notifications