வேலை பளு தாங்க முடியலை: குமுறிய பெண் சாப்ட்வேர் என்ஜினியர் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தரமணியில் உள்ள ஐடி பார்க்கின் 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சாப்ட்வேர் என்ஜினியர் ரேஷ்மா வேலைப் பளுவால் தான் மனம் சோரந்திருப்பதாக தனது பெற்றோரிடம் தெரிவித்திருந்திருக்கிறார்.

கேரளா மாநிலம் ஆலுவாவைச் சேர்ந்த புஷ்பரகரன், ரெஜினி தம்பதியின் இளைய மகள் பி. ரேஷ்மா(24). அவர் பெங்களூரில் பி.இ. படித்துவிட்டு சென்னை தரமணியில் உள்ள அஸ்ஸென்டாஸ் ஐடி பார்க்கில் இருக்கும் விஷுவல் கிராபிக்ஸ் கம்ப்யூட்டிங் சர்வீசஸ் இந்தியா பிவிடி லிமிடெட்டில் வேலைக்கு சேர்ந்தார்.

அவர் வேளச்சேரியில் உள்ள பெண்கள் ஹாஸ்டலில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் அவர் கடந்த புதன்கிழமை இரவு அலுவலகத்தின் 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவரது சகோதரர் ரன்தீப் கூறுகையில்,

தற்கொலை செய்து கொள்வதற்கு முந்தைய நாள் ரேஷ்மா எங்களுடன் போனில் பேசினார். அப்போது வேலைப் பளு அதிகமாக இருப்பதாக தெரிவித்தார் என்றார்.

வேலை பிடிக்கவில்லை என்றால் வந்துவிடு என்று குடும்பத்தார் கூறியதற்கு இல்லை நான் வேலை பார்ப்பேன் என்று தெரிவித்துள்ளார் ரேஷ்மா.

தனக்கு தற்கொலை செய்யும் எண்ணம் வருவதாக ரேஷ்மா தினமும் இரவு வேளையில் அழுததாக அவருடன் வேலை பார்த்த ஒருவர் போலீசாரிடம் தெரிவித்தார். ரேஷ்மா தனது பெற்றோர், சகோதரர், சகோதரி ரெமதிா ஆகியோருக்கு தனித்தனியே 4 கடிதங்கள் எழுதி வைத்துள்ளார். அதில் தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும், தனிமை வாட்டுவதால் வாழ விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+