ஈரக்காற்று வீசுகிறது... சென்னையில் வெப்பத்தின் தாக்கம் குறையும்... உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: ஈரப்பதம் கலந்த காற்று வீசுவதால் சென்னையில் வெப்பத்தின் தாக்கம் குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளுக்கு நாள் வெயிலின் கொடுமை அதிகரித்து வருவதால், இனி வரும் நாட்களை எப்படி சமாளிக்கப் போகிறோம் என கலக்கத்தில் இருந்த தமிழக மக்களுக்கு, காதுகளில் தேன் வார்க்கும் செய்தி ஒன்றை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஆம், ஈரப்பதம் கலந்த காற்று வீசுவதால், சென்னையில் வெப்பத்தின் தாக்கம் குறையும் என்றும், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், சென்னையில் வெப்பத்தின் தாக்கம் 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். வடதமிழகத்தின் உட்பகுதியில் 24 மணி நேரம் அனல் காற்று வீச வாய்ப்பு என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
அதோடு, கடல் காற்று அதிகமாக வீசுவதால் மீனவர்கள் எச்சரிக்கையாக கடலுக்கு செல்ல வேண்டும் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications