கொளுத்தும் வெயில்: 9 நகரங்களில் சதம்... திருப்பத்தூரில் 104 டிகிரி
வேலூர்: தமிழகத்தில் 9 நகரங்களில் வியாழக்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவானது. திருப்பத்தூரில் அதிகபட்சமாக 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.
கடந்த ஒரு வார காலமாகவே சதத்தை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. சென்னை தொடங்கி பல மாவட்டங்களில் வெயில் சதமடித்துள்ளது. வேலூரில் அதிகபட்சமாக நேற்று 106 டிகிரி வரை கொளுத்தியுள்ளது வெயில்.

தமிழ்நாட்டில் தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக பல நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது.
மேலும் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பகல் வேளைகளில் பொதுமக்கள் வெளியே வரவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு சூரியன் மறைந்த பிறகும் பகலில் அடித்த வெயிலின் தாக்கம் காரணமாக அனலாக உள்ளதால் வீட்டில் இருப்பவர்கள் கூட புழுக்கத்தில் தவிக்கும் நிலை காணப்படுகிறது
இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகபட்சமாக திருப்பத்தூரில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது. அடுத்து வரும் நாள்களுக்கு வழக்கத்தை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் கணிசமாக உயரும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை பதிவான வெயில் நிலவரம் (டிகிரி ஃபாரன்ஹீட்டில்)
திருப்பத்தூர் - 104
சேலம் - 102
மதுரை - 102
கரூர் - 102
திருச்சி - 102
பாளையங்கோட்டை - 102
தருமபுரி - 102
வேலூர் - 100
கோவை - 100












Click it and Unblock the Notifications