மரணித்த பட்டத்து மாடு.. ஊரே கூடி கண்ணீர் அஞ்சலி செலுத்தி நெகிழ்ச்சி!
- ஜெயக்குமார், சிங்கப்பூர்
கம்பம்: மாடுகளை வைத்து நாடு தழுவிய விவாதம் சூடுபிடித்துள்ள நிலையில் தேனி மாவட்டம் கம்பம் நகரில் ஒரு உருக்கமான சம்பவம் நடந்துள்ளது.
இந்தியா முழுவதும் மாட்டிறைச்சி விவாதம் நடந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில் தேனி மாவட்டம் கம்பம் மாநகரில் வீற்றிருக்கும் நந்தகோபால் கோவிலின் பட்டத்து மாடு இன்று அதிகாலை இறந்து போனது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு மக்கள் அனைவரும் சோகமடைந்துள்ளனர்.

மத மாச்சரியம் பார்க்காமல், ஜாதி பாகுபாடு பார்க்காமல், அனைவரது வீட்டிலும் இது துக்கமாக அனுசரிக்கப்பட்டது. இங்கு வாழும் முஸ்லீம் மக்களும் இந்துக்களோடு கை கோர்த்து அவர்களும் துக்கம் அனுசரித்துள்ளனர். பட்டத்து மாட்டுக்கு இறுதி சடங்கினை ஊரே ஒன்று திரண்டு சாதி மதம் பார்க்காமல் நடத்தியது.

மாட்டிறைச்சி விவாதம் நடக்கிற இவ்வேளையில் மனிதநேயமும் தெய்வீகமும் சாகவில்லை என்பதையே இந்நிகழ்வுகள் உணர்த்திக்கிறது .













Click it and Unblock the Notifications