கச்சியப்பர் சிலை திருட்டில் கோவில் அர்ச்சகரே கைதான கொடுமை -சிலையை மதுபோதையில் வீசியதாக வாக்குமூலம்
கோயில் சிலையை திருடியது தொடர்பாக அர்ச்சகரை கைது செய்துள்ளது காவல்துறை.
Recommended Video

காஞ்சிபுரம்: குமரக்கோட்டம் முருகன் கோயிலில் நடந்த சிலை திருட்டு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கோயில் அர்ச்சகர் கார்த்திக் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சியில் மிகவும் புகழ்பெற்றது காஞ்சி குமரக்கோட்டம் கோயில். இத்திருக்கோவிலில் கச்சியப்பருக்கு 29 சென்டிமீட்டர் உயரமும் 18 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட, சுமார் ஏழரை கிலோ எடையுள்ள வெண்கல சிலை இருந்தது. வருடத்திற்கு ஒருமுறை இந்த சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யபட்டு நகரின் முக்கிய வீதிகளில் உலா வருவது வழக்கம்.

மார்ச் முதல் வாரத்தில் இந்த விழா நடைபெற்று உற்சவ சிலைகளுடன் வைக்கபட்டிருந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி கச்சியப்பர் சிலை காணாமல் போனதாக கூறப்படுகிறது.
எனவே சிலை திருட்டுகுறித்து, கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீசார், கோயில் அர்ச்சகர் கார்த்திக்கிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், சிலையை, அருகிலுள்ள சர்வதீர்த்த குளத்தில் மது போதையில் வீசியதாக கூறியிருக்கிறார்.
இதையடுத்து, தீயணைப்பு துறையினர் உதவியுடன் போலீசார் 6 மணி நேரம் தேடியும், கச்சியப்பர் சிலை கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, கோவில் அர்ச்சகரின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு அவரை போலீசார் கைது செய்து, கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அவரை போலீசார் ஆஜர்படுத்தினர்.
பின்னர் நீதிபதி உத்தரவின்படி, திருச்சி மத்திய சிறையில் 15 நீதிமன்ற காவலில் அர்ச்சகர் கார்த்திக் அடைக்கப்பட்டார். எனினும், தற்போது வரை சிலை மீட்கப்படாததால் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications