கச்சியப்பர் சிலை திருட்டில் கோவில் அர்ச்சகரே கைதான கொடுமை -சிலையை மதுபோதையில் வீசியதாக வாக்குமூலம்
கோயில் சிலையை திருடியது தொடர்பாக அர்ச்சகரை கைது செய்துள்ளது காவல்துறை.
Recommended Video

காஞ்சிபுரம்: குமரக்கோட்டம் முருகன் கோயிலில் நடந்த சிலை திருட்டு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கோயில் அர்ச்சகர் கார்த்திக் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சியில் மிகவும் புகழ்பெற்றது காஞ்சி குமரக்கோட்டம் கோயில். இத்திருக்கோவிலில் கச்சியப்பருக்கு 29 சென்டிமீட்டர் உயரமும் 18 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட, சுமார் ஏழரை கிலோ எடையுள்ள வெண்கல சிலை இருந்தது. வருடத்திற்கு ஒருமுறை இந்த சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யபட்டு நகரின் முக்கிய வீதிகளில் உலா வருவது வழக்கம்.

மார்ச் முதல் வாரத்தில் இந்த விழா நடைபெற்று உற்சவ சிலைகளுடன் வைக்கபட்டிருந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி கச்சியப்பர் சிலை காணாமல் போனதாக கூறப்படுகிறது.
எனவே சிலை திருட்டுகுறித்து, கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீசார், கோயில் அர்ச்சகர் கார்த்திக்கிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், சிலையை, அருகிலுள்ள சர்வதீர்த்த குளத்தில் மது போதையில் வீசியதாக கூறியிருக்கிறார்.
இதையடுத்து, தீயணைப்பு துறையினர் உதவியுடன் போலீசார் 6 மணி நேரம் தேடியும், கச்சியப்பர் சிலை கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, கோவில் அர்ச்சகரின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு அவரை போலீசார் கைது செய்து, கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அவரை போலீசார் ஆஜர்படுத்தினர்.
பின்னர் நீதிபதி உத்தரவின்படி, திருச்சி மத்திய சிறையில் 15 நீதிமன்ற காவலில் அர்ச்சகர் கார்த்திக் அடைக்கப்பட்டார். எனினும், தற்போது வரை சிலை மீட்கப்படாததால் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications