ஹெலிகாப்டரை நிறுத்த இடமில்லை.. தேனி அரசு மருத்துவமனையில் தற்காலிக ஹெலிபேட்!
தேனி அரசு மருத்துவமனையில் தற்காலிக ஹெலிபேட் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
Recommended Video

தேனி: குரங்கணி விபத்து மீட்பு பணிக்கு வசதியாக தேனி அரசு மருத்துவமனையில் தற்காலிக ஹெலிபேட் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
தேனி அருகே குரங்கணி காட்டுப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு இருக்கிறது. இந்த காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவி வருகிறது.இந்த பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட சென்னை, கோவை, ஈரோடு மாணவிகள் வந்துள்ளனர்.
இந்தவிபத்தில் இது வரை 8 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். 27 பேர் இதுவரை மோசமான காயங்களுடன் மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.

மீட்பு
இந்த மீட்பு பணியில் மத்திய கமாண்டோ படை ஈடுபட்டு வருகிறது. அதேபோல் தமிழக தீயணைப்பு துறை, அவசர கால மீட்பு குழு ஆகியவை நேற்று மாலையில் இருந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. கேரளா போலீஸும் உதவிக்கு வந்துள்ளது.

கோவையில் இருந்து உதவி
இந்த நிலையில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த மத்திய அரசு விமான படையை அனுப்பி இருக்கிறது. கோவை சூலூர் விமான படை தளத்தில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் விரைந்துள்ளது.

கஷ்டமாக இருக்கிறது
ஆனால் இந்த விமானங்களை மருத்துவமனைக்கு அருகில் நிறுத்த முடியாமல் மீட்பு குழு கஷ்டப்பட்டு வருகிறது. இதனால் மருத்துவமனையில் இருந்து மிக அதிக தூரத்திலேயே மீட்கப்பட்டவர்கள் இறக்கப்பட்டு, அங்கிருந்து ஆம்புலன்சில் கொண்டு வரப்படுகிறார்கள்.

ஹெலிபேட்
இந்த நிலையில் தற்போது இவர்களை எளிதாக மீட்க தேனி அரசு மருத்துவமனைக்கு அருகிலேயே ஹெலிபேட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தற்காலிக ஹெலிபேட் அமைக்கும் பணியும் இந்திய ராணுவப்படை ஈடுபட்டு வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications