ஹெலிகாப்டரை நிறுத்த இடமில்லை.. தேனி அரசு மருத்துவமனையில் தற்காலிக ஹெலிபேட்!
தேனி அரசு மருத்துவமனையில் தற்காலிக ஹெலிபேட் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
Recommended Video

தேனி: குரங்கணி விபத்து மீட்பு பணிக்கு வசதியாக தேனி அரசு மருத்துவமனையில் தற்காலிக ஹெலிபேட் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
தேனி அருகே குரங்கணி காட்டுப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு இருக்கிறது. இந்த காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவி வருகிறது.இந்த பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட சென்னை, கோவை, ஈரோடு மாணவிகள் வந்துள்ளனர்.
இந்தவிபத்தில் இது வரை 8 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். 27 பேர் இதுவரை மோசமான காயங்களுடன் மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.

மீட்பு
இந்த மீட்பு பணியில் மத்திய கமாண்டோ படை ஈடுபட்டு வருகிறது. அதேபோல் தமிழக தீயணைப்பு துறை, அவசர கால மீட்பு குழு ஆகியவை நேற்று மாலையில் இருந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. கேரளா போலீஸும் உதவிக்கு வந்துள்ளது.

கோவையில் இருந்து உதவி
இந்த நிலையில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த மத்திய அரசு விமான படையை அனுப்பி இருக்கிறது. கோவை சூலூர் விமான படை தளத்தில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் விரைந்துள்ளது.

கஷ்டமாக இருக்கிறது
ஆனால் இந்த விமானங்களை மருத்துவமனைக்கு அருகில் நிறுத்த முடியாமல் மீட்பு குழு கஷ்டப்பட்டு வருகிறது. இதனால் மருத்துவமனையில் இருந்து மிக அதிக தூரத்திலேயே மீட்கப்பட்டவர்கள் இறக்கப்பட்டு, அங்கிருந்து ஆம்புலன்சில் கொண்டு வரப்படுகிறார்கள்.

ஹெலிபேட்
இந்த நிலையில் தற்போது இவர்களை எளிதாக மீட்க தேனி அரசு மருத்துவமனைக்கு அருகிலேயே ஹெலிபேட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தற்காலிக ஹெலிபேட் அமைக்கும் பணியும் இந்திய ராணுவப்படை ஈடுபட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications