நெல்லையில் 10 தாசில்தார்கள் அதிரடி மாற்றம் - கலெக்டர் உத்தரவு
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் 10 தாசில்தார்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் வருவாய் துறையில் ஓராண்டு பணி முடித்த தாசில்தார்கள், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்த விபரம் வருமாறு, (பழைய பணியிடம் அடைப்புகுறிக்குள்):
பொன்னையா, தாசில்தார்-விகேபுதூர் (கோட்ட கலால் அலுவலர், தென்காசி), சங்கரநாராயணன், தாசில்தார், அம்பை வன நிலவரி திட்டம் (தாசில்தார், விகேபுதூர்), செல்வநாயகம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார், கடையநல்லூர் (குடிமை பொருள் வழங்கல் தாசில்தார், சிவகிரி), நடராஜன், கோட்ட கலால் அலுவலர், தென்காசி(குடிமை பொருள் வழங்கல் தாசில்தார், தென்காசி), கோட்டூர்சாமி , தனி தாசில்தார், கல்வி உதவி தொகை பிரிவு, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலகம்(மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர், நெல்லை), பாலசுப்பிரமணியன், தனி தாசில்தார், சுனாமி,நெல்லை கலெக்டர் அலுவலகம் (குடிமை பொருள் வழங்கல் தாசில்தார், நெல்லை), ரவிக்குமார், குடிமை பொருள் வழங்கல் துறை, சிவகரி (நீதி பரிபாலன பயிற்சி), திருநாவுக்கரசு, தனி தாசில்தார், குடிமை பொருள் வழங்கல், நெல்லை (நீதி பரிபாலன பயிற்சி), பாலமுருகன், மாவட்ட வழங்கல் அலுலவரின் நேர்முக உதவியாளர்,நெல்லை கலெக்டர் அலுவலகம் (நீதி பரிபாலன பயிற்சி).
இதற்கான உத்தரவை நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன் பிறப்பித்துள்ளார்.