உதயமானது தென்காசி மாவட்டம்.. கோலாகல விழா.. தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
தமிழகத்தின் புதிய மாவட்டமாக தென்காசி உருவாகி உள்ளது
Recommended Video
தென்காசி: மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே, தமிழகத்தின் 33-வது மாவட்டமாக தென்காசி உதயமாகி உள்ளது.. இந்த புதிய மாவட்டத்தையும், அதன் நிர்வாக பணிகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களாக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் ஏற்கனவே உதயமாகி உள்ளன.
இதில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. தென்காசியை தலைமையிடமாக கொண்டு 33வது புதிய மாவட்டம் அமைகிறது. அதாவது தென்காசி, சங்கரன்கோவில் இரு வருவாய் கோட்டங்களுடன், 8 தாலுகாக்களுடன் இந்த புதிய மாவட்டம் உருவாகிறது.

அரசாணை
தமிழக முதல்வர் இது சம்பந்தமாக ஏற்கனவே 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு தென்காசி பகுதி மக்களை ஏகப்பட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.. நல்ல வரவேற்பும் கிடைத்தது. இதையடுத்து, அதற்கான அரசாணையையும் வெளியிட்டு, தனி அதிகாரியையும் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

8 தாலுக்காக்கள்
தென்காசி, சங்கரன்கோவில் இரு வருவாய் கோட்டங்கள், 5 சட்டசபை தொகுதிகள், 8 தாலுக்காக்கள் அதாவது, தென்காசி, சங்கரன்கோவில், சிவகிரி, ஆலங்குளம், திருவேங்கடம், கடையநல்லூர், செங்கோட்டை, வி.கே.புதூர் ஆகிய 8 தாலுகாக்கள் இந்த மாவட்டத்தில் அடங்கும்.

கோலாகல விழா
இப்படி, புதிய மாவட்டத்திற்கான எல்லை வரையறை தீவிரமாகவும், செவ்வனே முடிந்த நிலையில், இன்று அம்மாவட்டத்திற்கான துவக்க விழா தற்போது நடைபெற்று வருகிறது. தென்காசியில் ஆசாத்நகரை அடுத்துள்ள இசக்கி மகால் வளாகத்தில் இந்த விழா வெகு சிறப்பாக நடந்து வருகிறது. முதல்வர் பழனிசாமி இதனை துவக்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

பங்கேற்பு
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே இந்த புதிய மாவட்டத்திற்கு கலெக்டராக ஜி.கே.அருண் சுந்தர் தயாளன் மற்றும் எஸ்பி சுகுணாசிங் உள்ளிட்டோரை தமிழக அரசின் தலைமை செயலாளர் நியமித்து உத்தரவிட்டிருந்தார். இவர்களும் இந்த நிகழ்ச்சியில் உற்சாகத்துடன் கலந்து கொண்டுள்ளனர். இதைத்தவிர பொதுமக்களும் புடைசூழ பங்கேற்றுள்ளதால் தென்காசியே இன்று விழாக்கோலம் பூண்டுள்ளது.. தங்களின் புதிய மாவட்ட குழந்தையை உளமார்ந்த மகிழ்ச்சி, பூரிப்புடன் வரவேற்று வருகின்றனர்.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications