பாலத்தைத் திறக்காமல் என்ன செய்கிறார் சரத்?... கவுன்சிலர்கள் வெளிநடப்பு!
தென்காசி: தென்காசி நகராட்சி கவுன்சிலர்கள் தென்காசி எம்.எல்.ஏ.சரத்குமாரை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.
தென்காசி நகராட்சியின் கூட்டம் தலைவர் பானு தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் 25க்கும் மேற்ப்பட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர்கள் எழுந்து குடிநீர் பிரச்சனை,16வது வார்டில் டெங்கு காய்ச்சல் அறிகுறி,சுகாதாரம்.குறித்து தங்களது கருத்துக்களை கூறினார்.

பின்னர் திமுக.உறுப்பினர்.அப்துல் காதர்,சுயேட்சை கவுன்சிலர்கள் ராசப்பா, நாகூர் மீரான், முபாரக் உள்ளிட்டோர் எழுந்து தென்காசி ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது. அதனை திறக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரூ.32 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த பாலத்தை வெள்ளையடிக்க ரூபாய் 20 லட்சம் ரூபாய் செலவு செய்ய முடியாத நகராட்சி நிர்வாகம் மற்றும் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் சரத்குமாரும் முயற்சி எடுக்கவில்லை.
இதனைக் கண்டித்து நாங்கள் கூட்டஅரங்கத்தை விட்டு வெளிநடப்பு செய்வதாக கூறி வெளியேறினர். இதனால்அங்கு பரபரப்பு உருவானது.












Click it and Unblock the Notifications