ரிஷிவந்தியம் அருகே பயங்கர வெடி சத்தம்.. பதறிய மக்கள்.. பரவிய ‘பகீர்’ வீடியோ.. காவல்துறை வார்னிங்!
கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் சுற்று வட்டார பகுதியில் இன்று மதியம் 12 மணியளவில் பயங்கரமான வெடி சத்தம் கேட்டதாகவும், இந்த சத்தம் அங்கு சில கிலோ மீட்டர்கள் தொலைவுக்கு கிராமங்களைச் சேர்ந்த மக்களால் உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள கிராமப் பகுதிகளில் இன்று நண்பகல் 12 மணியளவில் பயங்கர வெடி சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் மையனூர், மெய்யூர், கொளத்தூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களால் இந்த பயங்கர சத்தம் உணரப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளர் மோகன்ராஜும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு, போலீசாருக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கினார். அதைத்தொடர்ந்து, டிஎஸ்பி மனோஜ் குமார், காவல் ஆய்வாளர் பாலாஜி ஆகியோரை கொண்ட போலீசார் குழு பல மணி நேரமாக சுற்றுவட்டாரப் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்பகுதியில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளதா என ட்ரோன் மூலமாகவும் போலீசார் தேடி வருகின்றனர். கல் குவாரியில் இருந்து வெடிச் சத்தம் வந்ததா, அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் சத்தம் ஏற்பட்டதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, திருக்கோவிலூர் பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதாகவும், அதன் காரணமாகவே பயங்கரமான வெடி சத்தம் கேட்டதாகவும் வீடியோ ஒன்று பரவி வருகிறது. அப்பகுதியினரிடையே வாட்ஸ் அப் குழுக்களில் இந்த வீடியோ படுவேகமாகப் பரவியுள்ளது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே வெடி சத்தம் கேட்டது தொடர்பாக வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருக்கோவிலூர் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக அப்பகுதியில் பரவி வரும் வீடியோ 2021ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடந்தது என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
மேலும், பொது அமைதியை சீர்குலைக்கும் விதமாக பொய்யான செய்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விவகாரம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications