தீவிரவாதி சித்திக் சித்தூரில் பதுங்கலா? போலீஸ் தீவிர தேடுதல்!!
சென்னை: தலைமறைவு தீவிரவாதி அபுபக்கர் சித்திக்கை பிடிக்க ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட பகுதியில் காவல்துறையினர் வீடு வீடாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் கைது செய்யப்பட்ட போலீஸ் பக்ருதீன் அளித்த தகவலின் அடிப்படையில் தீவிரவாதிகள் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் தமிழக - ஆந்திர எல்லையான புத்தூரில் கைது செய்யப்பட்டனர்.
சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் இவர்களை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
விசாரணையில் அவர்கள் அளித்த தகவலின் படி கொலைகளுக்கு மூல காரணமாக இருந்த அபுபக்கர் சித்திக் என்ற தீவிரவாதியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சித்தூர் மாவட்டத்தின் புங்கனூர் என்ற பகுதியில் ஆந்திர காவல்துறையினர் வீடு வீடாக தேடுதல் வேட்டை நடத்தினர். வீடுகளில் தங்கியிருந்தவர்கள் குறித்த விவரங்களை காவல்துறையினர் சேகரித்துள்ளதாக ஆந்திர காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications