கோவையில் தீவிரவாதி அபுபக்கர் சித்திக் பதுங்கலா?
கோவை: போலீசாரால் தேடப்பட்டு வரும் தீவிரவாதி அபுபக்கர் சித்திக் கோவை பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தனிப்படை போலீசார் சோதனை நடத்திவருகின்றனர்.
ஹிந்து முன்னணி பிரமுகர் வெள்ளையப்பன், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்டோர் கொலை சம்பவங்களில் தொடர்புடைய தீவிரவாதிகள் போலீஸ் பக்ரூதின், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் கடந்த மாதம் ஆந்திர மாநிலம் புத்தூரில் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுடன் தேடப்பட்டு வந்த அபுபக்கர் சித்திக் தலைமறைவாகவுள்ளார். இவரை பிடிக்கும் முயற்சியில் தமிழக போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அபுபக்கர் சித்திக் கோவை அல்லது கேரள மாநிலத்தில் பதுங்கியிருப்பதாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து கோவையில் சந்தேகமான சில இடங்களில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அத்துடன் தனிப்படை போலீசார் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தோணிபாடா என்ற இடத்திற்கு விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications