பெங்களூருவில் தமிழர்கள் வைத்த பேனர்கள் கிழிப்பு.. தமிழிசை கண்டனம்

பெங்களூருவில் தமிழர்கள் வைத்த பேனர்கள் கிழிக்கப்பட்டதற்கு தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் பேனர்கள் கர்நாடக மாநிலத்தில் சுயநலத்திற்காக கிழிக்கப்படுகிறது என்று பாஜக தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் தமிழர்கள் வைத்த தமிழ் பேனர்களைக் கன்னட அமைப்பினர் கிழித்தெறிந்தனர். இது தமிழர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னட அமைப்பினரின் இந்தச் செயலுக்கு பாஜக தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.

Thamizhisai condemns for removing of Tamil banner

இதுகுறித்து தமிழிசை மேலும் கூறியதாவது:

கர்நாடகத்தில் தமிழர்களும் கன்னடர்களும் ஒற்றுமையாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பெங்களூருவில் தமிழர்கள் வாக்களிக்கவில்லை என்றால் எந்தக் கட்சியாலும் வெற்றி பெற முடியாது. ஒரு குறிப்பிட்ட அமைப்பினர் இதுபோன்று செய்வதால் பதற்றம் நிலவுகிறது.

Thamizhisai condemns for removing of Tamil banner

அரசியலுக்காகவும், சுயநலத்திற்காகவும் இப்படி நடந்து கொள்கிறார்கள். எனவே, கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய வேற்றுமைகள் மக்கள் மனதில் பதியவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+