தினகரனுக்கு 50 எம்.எல்.ஏக்கள் வாழ்த்து- ஸ்லீப்பர் செல்கள் குறித்து தங்க தமிழ்ச்செல்வன் பகீர்
தினகரனுக்கு 50 எம்எல்ஏக்கள் வாழ்த்து தெரிவித்ததாக தங்க தமிழ்ச் செல்வன் தெரிவித்தார்.
சென்னை: ஆர்கே நகரில் வெற்றி பெற்ற தினகரனுக்கு 50 எம்எல்ஏக்கள் வாழ்த்து தெரிவித்ததாக தங்க தமிழ்ச் செல்வன் தெரிவித்தார்.
ஆர்கே நகரில் தினகரன் வெற்றி பெற்றுவிட்டார். ஆனால் அவரிடம் ஆளும் கட்சி தோற்று போனது. இது குறித்து ஆலோசனை நடத்த அதிமுக தலைமை கழகத்தில் நடைபெற்றது.
அப்போது தினகரனுக்கு ஆதரவாக உள்ள 6 மாவட்ட செயலாளர்கள் தங்கதமிழ் செல்வன், வெற்றிவேல், ரங்கசாமி, விபி கலைராஜன், பார்த்திபன், முத்தையா ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுவிட்டனர்.
இதுகுறித்து தங்கதமிழ் செல்வன் கூறுகையில், ஆர்கே நகரில் தினகரன் வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு எடப்பாடி அணியில் உள்ள 50 எம்எல்ஏக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட மக்கள் வாக்களித்துள்ளனர். ஓபிஎஸ் முதல்வராக இருந்ததற்கு தினகரன்தான் காரணம். பாஜகவின் காலில் விழாமல் அதிமுக இருந்திருந்தால் இவர்களை மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பர். எடப்பாடிக்கு அரசு நிர்வாகம் செய்ய தெரியவில்லை.
அதிமுக அமைச்சர்கள் வாகனத்தில் பணம் எடுத்து கொண்டு பணப்பட்டுவாடா செய்தனர். ஆனால் மக்கள் தினகரனுக்குத்தான் வாக்களித்தனர். என்னை நீக்குவதற்கு எடப்பாடிக்கு அதிகாரம் இல்லை. தமிழகத்தில் விரைவில் டிடிவி தினகரன் தலைமையிலான ஆட்சி மாற்றம் வரும் என்றார் அவர்.