வெல்லப் போவது யார்? அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் இன்று 'ரிசல்ட்'
தஞ்சை, அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
சென்னை: தேர்தல்கள் நடைபெற்ற தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் நெல்லித்தோப்பு ஆகிய 4 தொகுதிகளிலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் மறுதேர்தலும் திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியின் நெல்லித்தோப்பு ஆகியவற்றில் இடைத்தேர்தலும் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளும் அதிமுக, திமுக- காங்கிரஸ், தேமுதிக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.

மக்கள் நலக் கூட்டணி, பாமக, தமாகா ஆகியவை இத்தேர்தலை புறக்கணித்தன. கடந்த 19-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் அதிகபட்சமாக அரவக்குறிச்சியில் 82% வாக்குகள் பதிவாயின.
அதற்கு அடுத்தப்படியாக திருப்பரங்குன்றத்தில் 71.04% வாக்குகளும், தஞ்சையில்69.02% வாக்குகளும் பதிவாகியிருந்தன. புதுச்சேரியின் நெல்லித்தோப்பு தொகுதியில் மிக மிக அதிகபட்சமாக 85.76% வாக்குகள் பதிவாகின.
இங்கு காங்கிரஸ் சார்பில் முதல்வர் நாராயணசாமியும், அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகரும் போட்டியிட்டனர். 4 தொகுதி தேர்தல்களும் பொதுவாக அமைதியாக நடைபெற்றாலும் சில இடங்களில் சலசலப்பும் பதற்றமும் இருந்தது.
வாக்குப் பதிவு முடிவடைந்த பின்னர் அனைத்து வாக்குப் பதிவு இயந்திரங்களும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அவை வைக்கப்பட்டுள்ள மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணும் பணி தொடங்கும். காலை 10 மணியளவில் முன்னணி நிலவரம் தெரியவரும் என்றும் பிற்பகலுக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications