500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்தது சரியானது தான்... தந்தி டிவி கருத்துக்கணிப்பு
சென்னை: பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த தடைவிதித்தது சரியான முடிவு தான் என 64 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருப்பதாக தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
500,1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு நவம்பர் 8-ம் தேதி அறிவித்தது. இந்த நிலையில் மக்களின் மனநிலை குறித்து அறிய தந்தி டிவி கருத்துகணிப்பை நடத்தியது.
மக்கள் யார் பக்கம் என்ற தலைப்பில் மத்திய அரசின் ரூபாய் நோட்டு அறிவிப்பு பற்றி நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதன்படி 500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்தது சரியானது என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்திருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
சரியானது -64%,
மோசமானது - 31%,
கருத்து இல்லை -5%
மத்திய அரசின் முடிவு தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு தனிப்பட்ட வாழ்வில் நல்ல தாக்கம் ஏற்படுத்தும் என 66 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
தனிப்பட்ட வாழ்வில் நல்ல தாக்கம் ஏற்படுத்தும் - 66%
எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது - 30 %
கருத்து இல்லை -4 %
எதிர்க்கட்சிகளின் போராட்டம் அரசியல் வித்தை என 60க்கும் அதிகமானோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளநரனர்.
அரசியல் வித்தை -62 %
நியாயமானது -26%
கருத்து இல்லை -12%