எடப்பாடி அணியின் ஒவ்வொரு செங்கலாக உருவப்படும்: டிடிவி தினகரன் ஆவேசம்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

டிடிவி தினகரன் ஆவேசம்- வீடியோ
விருதுநகர்: எடப்பாடி அணியின் செங்கல்கள் உருவப்படும் என்று சுயேச்சை எம்எல்ஏ டிடிவி தினகரன் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: ஜெயக்குமார் ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார். தவளை மாதிரி ஏதாவது கத்திக்கொண்டே இருப்பார். ஆர்கேநகர் தேர்தலில் தினகரன் டெபாசிட் வாங்க மாட்டார் என்றார், ஜெயித்த பிறகு ஹவாலா முறையில் ஜெயித்தார் என்று தெரிவித்தார். ஒவ்வொரு நாளும் பின்னடைவு. அதை மறைக்க பேசுவார். ஜெயக்குமார்தான் அதிமுக செய்தி தொடர்பாளர் போல செயல்பட்டு வருகிறார்.

எடப்பாடி அணியில் இருந்து ஒவ்வொரு செங்கலாக உருவப்படும். 6 எம்எல்ஏக்களை தவிர அத்தனை பேரும் எனக்கு ஆதரவாக வருவார்கள். ஆட்சி ஆட்டம் கண்டுகொண்டு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications