6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாக வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்

6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாக வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்து இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாக வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்து இருக்கிறார்.

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி காவிரி ஆற்றை உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமையில்லை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

The Cauvery Management Board should be set up within six weeks: Minister Jayakumar

தமிழகத்திற்கு கர்நாடகா 177.25 டி.எம்.சி நீர் தர உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடுவர் மன்றம் 192 டிஎம்சி வழங்க உத்தரவிட்ட நிலையில் அதனை சுப்ரீம் கோர்ட் குறைத்துள்ளது.

கர்நாடகத்துக்கு 280.75 டி.எம்.சி. நீர் வழங்க உத்தரவு. மேலும் 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாக வேண்டும் என்றும் கூறியுள்ளது.

ஆனால் கர்நாடகாவில் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் மத்திய பாஜக அரசு இதில் முடிவெடுக்காமல் இருக்கிறது. இரண்டு வாரத்திற்கு மேலாகியும் இதுவரை எந்தவிதமான அறிவிப்பும் இதில் வெளியாகவில்லை.

இது குறித்து தற்போது தலைமை செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்து இருக்கிறார்.

அதில் ''உச்சநீதிமன்ற உத்தரவின்படி 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாக வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பு என்பது நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்று'' என்றுள்ளார்.

மேலும் ''காவிரி விவகாரத்தில் மாநில அரசு உரிமையை விட்டுக்கொடுக்காது. காவிரி தீர்ப்பு தொடர்பாக மார்ச் 9-ம் தேதி டெல்லியில் 4 மாநிலங்கள் ஆலோசனை நடக்கிறது. தமிழக தலைமை செயலாளர், பொதுப்பணி செயலாளர் இதில் பங்கேற்பார்கள்'' என்றுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+