ஒரு பக்கம் கொரோனா.. மறு பக்கம் ஆம்புலன்ஸ் "வெயிட்டிங்".. கடைக்கு போய் பக்கோடா வாங்கிய தாத்தா!
தென்காசி: தென்காசி மாவட்டம் புளியக்குடியில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான முதியவர் ஒருவர் ஆம்புலன்ஸை காத்திருக்க வைத்து விட்டு பக்கோடா வாங்கச் சென்று வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
தென்காசி மாவட்டத்தில் அண்மைக்காலமாக கொரோனா பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 200க்கும்மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டதால் அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 824 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் புளியங்குடியில் சுமார் 40 பேருக்கு கொரேனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அங்குள்ள பழைய மார்க்கெட் பகுதியான சிதம்பர விநாயகர் கோவில் தெருவில் 26 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புறப்பட்ட தாத்தா
அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு பெரியவருக்கும் இரு பெண்களுக்கும் கொரோனா தொற்று சோதனைக்கு பின்னர் உறுதியானது. அவர்களை அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் வந்திருந்தது. தங்களுக்கு தேவையான உடமைகளை பைகளில் எடுத்துக் கொண்டு 3 பேரும் ஒருவர் பின் ஒருவராக வந்தார்கள். அவர்களை அழைத்துச்செல்ல சுகாதாதார பணியாளர்களுடன் காவலர் ஒருவரும் வந்திருந்தார்.,

கட்டை பையை பாத்துக்க
இதில் கடைசியில் கட்டைப் பையுடன் ஆம்புலன்ஸில் ஏறுவதற்காக வந்த பெரியவர், திடீரென இதோ வருகிறேன் என்று சொல்விட்டு ஆம்புலன்ஸை காத்திருக்க வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். உடன் வந்த காவலரை தனது கட்டை பையை பார்த்துக்குமாறு சொல்லிவிட்டு ஸ்வீட் கடைக்கு சென்றார். அங்கு பக்கோடாவை பெரிய பார்சலாக கட்டி வாங்கிக் கொண்டு தனது பையில் பத்திரமாக வைத்துக்கொண்டார்

எடுத்துக் கொடுத்த இளைஞர்
இதை அதிர்ச்சியுடன் சுகாதார அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த ஸ்வீட் கடை அருகில் சர்வசாதாரணமாக முதியவருக்கு அருகே பொதுமக்களும் நின்று கொண்டு இருந்தனர். அப்போது கடை முன்பு அந்த முதியவர் தவறவிட்ட பணத்தையும் ஒருவர் அவருக்கு எடுத்து கொடுத்தார். ஆனால் நல்லவேளையாக முதியவர் கையில் கையுறை அணிந்திருந்தார். சுற்றியிருந்தவர்கள் முககவசம் அணிந்திருந்தார்கள்.

அலட்சியம்
கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும். கொரோனா பாதித்தவர்கள் தனித்து இருக்க வேண்டும் என்று அரசு பலமுறை அறிவுறுத்தியும் மக்கள் செய்யும் இதுபோன்ற சில அலட்சியங்கள் , பேராபத்தில் முடிகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட போது ஆம்புலன்ஸை காத்திருக்க வைத்து விட்டு பக்கோடா வாங்கிச் சென்ற சம்பவம் புளியங்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications