ஜல்லிக்கட்டுப் புரட்சியின் போது சமத்தாக செயல்பட்ட மயிலாப்பூர் துணை கமிஷனருக்கு 'புரமோஷன்'!
சென்னை மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணனுக்கு விழுப்புரம் சரக டிஜஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணனுக்கு விழுப்புரம் சரக டிஐஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் நடைபெற்ற போராட்டத்தின் போது அவர் சிறப்பாக செயல்பட்டார் என கூறப்பட்டது.
தமிழகம் முழுவதும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 35 பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திருச்சி, மதுரை, உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மயிலாப்பூர் துணை கமிஷனராக இருந்த பாலகிருஷ்ணன் விழுப்புரம் சரக டிஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு பலக்கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.
போராட்டம் அமைதியாக நடைபெற இரவு பகலாக மெரினா பகுதியில் பாதுகாப்பு பணிகளை இவர் மேற்கொண்டார். மேலும் மெரினா போராட்டத்துக்குப் பிறகு மீண்டும் அதுபோன்ற ஒரு போட்டம் நடைபெற்றுவிடக் கூடாது இளைஞர்கள் அங்கு திரண்டுவிடக் கூடாது என்பதில் துணை பாலகிருஷ்ணன் கண்ணும் கருத்துமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யூனிபார்மில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு இவர் அளித்த நேர்காணல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கக்கோரி சட்டசபையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதேபோல் மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்து ஃபேஸ்புக்கில் போடப்பட்ட கண்டன கருத்துக்களையும் அவர் ஏற்றுக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரை விழுப்புரம் சரக டிஐஜியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications