இது தேர்தலா என்பதே எனக்குச் சந்தேகமாக உள்ளது: நாசர் ‘பகீர்’ பேட்டி
சென்னை: நடிகர் சங்கத் தேர்தல் ஒரு திருவிழா போல் காட்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார் நடிகர் நாசர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் சென்னையில் இன்று நடந்து வருகிறது. இதில் சரத்குமார் அணியும், விஷால் அணியும் எதிரெதிராக களமிறங்கியுள்ளனர். விஷால் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் நாசர்.

இந்நிலையில், தேர்தல் நடைபெறும் இடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் நாசர். அப்போது அவர் கூறியதாவது:-
இது தேர்தல் போலவே இல்லை, திருவிழா போல் இருக்கிறது. நடக்க இயலாதவர்கள் உட்பட உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் பலர் வாக்களிக்க வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தனைப் பேரை இந்த ஒரே இடத்தில் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது' என்றார்.
மேலும், தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ்நாடு நடிகர் சங்கமாக மாற்ற வேண்டும் என்ற ரஜினியின் கோரிக்கை குறித்து நாசரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘ரஜினியின் கோரிக்கை குறித்து பின்னர் ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும்' எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications