தமிழகத்தில் போலி மருத்துவர்கள் இல்லாத நிலையை உருவாக்க விஜயகாந்த் வலியுறுத்தல் !
தமிழக அரசு போலி மருத்துவர்களை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் போலி மருத்துவர்கள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் எனவும் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்
சென்னை: தமிழகத்தில போலி மருத்துவர்கள் இல்லாத நிலையை உருவாக்கி, தமிழக மக்களை இந்த அரசு காப்பாற்ற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பத்திரிகை செய்தியில் தமிழகம் முழுவதும் 30,000 போலி மருத்துவர்கள் உள்ளனர் என்று இந்திய மருத்துவ தலைவர் பாலசுப்ரமணியம் பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் போலி மருத்துவர்களை கண்டிபிடித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசும் உத்தரவு பிரபித்துள்ளது.

போலி மருத்துவர்களை கண்டுபிடிப்பதற்காக மருத்துவம், ஊரக நலப்பணிகள், மருந்து கட்டுப்பாட்டு துறைகள் மற்றும் காவல்துறையினரும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தாகவும், தமிழகம் முழுவதும் 190 போலி மருத்துவர்கள் சிக்கியுள்ளதாகவும் அரசு, பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டுள்ளது.
அமைச்சர் விஜயபாஸ்கர் போலி மருத்துவர்கள் 214 பேர் கைது செய்துள்ளதாக திண்டுக்கல் மருத்துவமனை ஆய்வு கூட்டத்தில் கூறியுள்ளார். போலி மருத்துவர்களை கண்டறிய 32 குழுக்கள் நிருவப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் 162 பேர் போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் சுகாதத்துறை அதிகாரி செய்தி வெளியிட்டுள்ளார்.
ஆனால் தமிழக அரசு போலி மருத்துவர்களை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்திய மருத்துவ தலைவர் 22.09.2014 ஆம் நாளில் தமிழகத்தில் 30,000 போலி மருத்துவர்கள் உள்ளதாக தெரிவித்தும், தமிழக அரசு ஏன் போலி மருத்துவர்களை முழுமையாக ஒழிக்காமல் இந்த அரசு உள்ளது. சம்மந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் ஏன் கடமை உணர்வுடன் செயல்படவில்லை. இந்த அரசு ஏன் ஆய்வு செய்யவில்லை.
பலநோக்கு சுகாதார பணிகள் திட்டத்தில் 5,000 மக்களுக்கு இரண்டு சுகாதார பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். சுகாதார அதிகாரிகள், சுகாதார பணியாளர்களுக்கு அவரவர் எல்லை பகுதிக்குள் செயல்படும் தனியார் மருத்துவமனைகள், மருத்துவம் பார்ப்போர் பட்டியலை தயார் செய்து போலி மருத்துவர்களை கண்டறியும் நிர்வாக அமைப்பு இருந்தும் இதுவரை கண்டறியாமல் இருக்கும் நிலையுள்ளது. இதுவரை திண்டுக்கல், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது என்று சொல்லும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏன் மற்ற மாவட்டங்களில் இப்பணிகுறித்து ஆய்வு செய்யவில்லை.
ஆங்கில பத்திரிகை செய்தியில் பொதுமக்களிடம் இருந்து புகார் கடிதம் பெரும் பட்சத்தில், போலி மருத்துவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கத்தயார் என்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தி வெளியிட்டுள்ளார். இச்செயல் "முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல்" இதன்மூலம் மக்களை திசைதிருப்பி, உண்மை நிலையை மறைத்து தவறான செய்தியை கூறும் அமைச்சரின் செயலை தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து போலி மருத்துவர்கள் தமிழகத்தில் இல்லாத நிலையை உருவாக்கி, தமிழக மக்களை இந்த அரசு காப்பாற்ற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications