Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் போலி மருத்துவர்கள் இல்லாத நிலையை உருவாக்க விஜயகாந்த் வலியுறுத்தல் !

தமிழக அரசு போலி மருத்துவர்களை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் போலி மருத்துவர்கள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் எனவும் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில போலி மருத்துவர்கள் இல்லாத நிலையை உருவாக்கி, தமிழக மக்களை இந்த அரசு காப்பாற்ற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பத்திரிகை செய்தியில் தமிழகம் முழுவதும் 30,000 போலி மருத்துவர்கள் உள்ளனர் என்று இந்திய மருத்துவ தலைவர் பாலசுப்ரமணியம் பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் போலி மருத்துவர்களை கண்டிபிடித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசும் உத்தரவு பிரபித்துள்ளது.

The Government failed to take action against fake doctors: vijayakanth

போலி மருத்துவர்களை கண்டுபிடிப்பதற்காக மருத்துவம், ஊரக நலப்பணிகள், மருந்து கட்டுப்பாட்டு துறைகள் மற்றும் காவல்துறையினரும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தாகவும், தமிழகம் முழுவதும் 190 போலி மருத்துவர்கள் சிக்கியுள்ளதாகவும் அரசு, பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கர் போலி மருத்துவர்கள் 214 பேர் கைது செய்துள்ளதாக திண்டுக்கல் மருத்துவமனை ஆய்வு கூட்டத்தில் கூறியுள்ளார். போலி மருத்துவர்களை கண்டறிய 32 குழுக்கள் நிருவப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் 162 பேர் போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் சுகாதத்துறை அதிகாரி செய்தி வெளியிட்டுள்ளார்.

ஆனால் தமிழக அரசு போலி மருத்துவர்களை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்திய மருத்துவ தலைவர் 22.09.2014 ஆம் நாளில் தமிழகத்தில் 30,000 போலி மருத்துவர்கள் உள்ளதாக தெரிவித்தும், தமிழக அரசு ஏன் போலி மருத்துவர்களை முழுமையாக ஒழிக்காமல் இந்த அரசு உள்ளது. சம்மந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் ஏன் கடமை உணர்வுடன் செயல்படவில்லை. இந்த அரசு ஏன் ஆய்வு செய்யவில்லை.

பலநோக்கு சுகாதார பணிகள் திட்டத்தில் 5,000 மக்களுக்கு இரண்டு சுகாதார பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். சுகாதார அதிகாரிகள், சுகாதார பணியாளர்களுக்கு அவரவர் எல்லை பகுதிக்குள் செயல்படும் தனியார் மருத்துவமனைகள், மருத்துவம் பார்ப்போர் பட்டியலை தயார் செய்து போலி மருத்துவர்களை கண்டறியும் நிர்வாக அமைப்பு இருந்தும் இதுவரை கண்டறியாமல் இருக்கும் நிலையுள்ளது. இதுவரை திண்டுக்கல், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது என்று சொல்லும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏன் மற்ற மாவட்டங்களில் இப்பணிகுறித்து ஆய்வு செய்யவில்லை.

ஆங்கில பத்திரிகை செய்தியில் பொதுமக்களிடம் இருந்து புகார் கடிதம் பெரும் பட்சத்தில், போலி மருத்துவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கத்தயார் என்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தி வெளியிட்டுள்ளார். இச்செயல் "முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல்" இதன்மூலம் மக்களை திசைதிருப்பி, உண்மை நிலையை மறைத்து தவறான செய்தியை கூறும் அமைச்சரின் செயலை தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து போலி மருத்துவர்கள் தமிழகத்தில் இல்லாத நிலையை உருவாக்கி, தமிழக மக்களை இந்த அரசு காப்பாற்ற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+