ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் வழங்குவது குறித்து அரசு முடிவு செய்யும்: ஆட்சியர் கருத்தால் அதிர்ச்சி!
ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் வழங்குவது குறித்து அரசு முடிவு செய்யும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் வழங்குவது குறித்து அரசு முடிவு செய்யும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை மக்களின் கடும் எதிர்ப்பால் அண்மையில் மூடி சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் கசிவு இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி 5 பேர் கொண்ட குழுவை அமைத்து நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் கந்தக அமிலம் கசிவு இருப்பது தெரியவந்தது.

அகற்றும் பணி தேக்கம்
இதனையடுத்து நேற்று காலை முதலே அந்த கந்தக அமிலத்தை ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து அகற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் ஆலையின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் அமிலத்தை அகற்றும் பணிகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

அரசிடம் கோரிக்கை
இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலக்கசிவை தடுக்கபோதிய மின்சாரம் தேவை என்றும் குறைந்த அளவு தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த அனுமதிக்கவும் வேதாந்தா நிறுவனம் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

1000 மெட்ரிக் டன்
இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஸ்டெர்லைட் ஆலையில் 1000 மெட்ரிக் டன் கந்தக அமிலம் உள்ளது. ஆலையில் இருந்து அமிலத்தை அப்புறப்படுத்த மேலும் 2 நாட்கள் ஆகும்.

டேங்கர் லாரிகள் தயார்
கந்தக அமிலம் தேவைப்படும் மற்ற ஆலைகளுக்கு இவை அனுப்பிவைக்கப்படும். இந்த கந்தக அமிலகத்தை மற்ற ஆலைக்கு கொண்டு செல்ல 5 டேங்கர் லாரிகள் தயாராக உள்ளது.

அரசு முடிவு செய்யும்
மின்சாரம் கேட்டு ஸ்டெர்லைட் ஆலை அளித்த கோரிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மின்சாரம் வழங்குவது குறித்து அரசு முடிவு செய்யும். இவ்வாறு ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications