திருப்பூர் கலெக்டர் அலுவலக முகப்பில் தேன்கூடு கலைந்தது.. சிதறி ஓடிய மக்கள்.. 20 பேர் காயம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பில் தேன் கூடு கலைந்ததால் போலீசார் உட்பட 20க்கும் மேற்பட்டோரை தேனீக்கள் கொட்டியதால் காயமடைந்தனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமையான இன்று பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முகப்பு பகுதியில் இருந்த தேன் கூடு திடீரென கலைந்தது. இதனால் தேனீக்கள் அங்கிருந்த பொதுமக்களை தாக்க துவங்கியது.

இதனால் மக்கள் குறை தீர்க்கூட்டத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள் மட்டுமல்லாது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களும் ஆங்காங்கே சிதறி ஓடினர். இதில் காவலர்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட பொதுமக்களை தேனீக்கள் தாக்கியது.
பாதிப்படைந்த அவர்கள் அனைவரும் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து காவல்துறையினரின் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அனைத்து கதவுகளும் உடனடியாக அடைக்கப்பட்டன.
காவல் துறையினர் பொதுமக்களை சிறிது நேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள்ளேயே பத்திரமாக இருக்குமாறு அறிவுறுத்தினர். கடந்த ஒரு வாரமாக தேன்கூடு பெரிய அளவில் இருந்த நிலையில் அதனை ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் அப்புறப்படுத்தவில்லை என கூறப்படுகிறது. ஊழியர்களின் அலட்சியம் காரணமாகவே குறைதீர் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தவர்களை தேனீக்கள் தாக்கி பெரிதும் சிரமத்துக்குள்ளானதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications