அண்ணா நூற்றாண்டு நூலகத்தை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு
சென்னை: அண்ணா நூற்றாண்டு நூலகத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி வழக்கறிஞர் குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தில் 2010 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் "அண்ணா நூற்றாண்டு நூலகம்" கட்டப்பட்டது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இந்த நூலகம் சரியாக பராமரிக்காமல் உள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து ஓய்வுப்பெற்ற பேராசிரியர் மனோன்மணி என்பவர் ஹைகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் கடந்த திமுக ஆட்சிகாலத்தில் கட்டபட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சரியாக பராமரிக்கப்படவில்லை என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முறையான பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் பராமரிப்பு பணிகளில் குறைபாடுகள் உள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் வரும் மார்ச் 10 தேதிக்கு பிறகு நூலகத்தில் ஆய்வு செய்ய வழக்கறிஞர் குழுவுக்கு உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Savukku Shankar: சவுக்கு சங்கர் நாளைக்குள் சரண் அடைய வேண்டும்.. இல்லையென்றால் கைது செய்யலாம்! ஐகோர்ட் அதிரடி -
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
கௌதம் மேனனுக்கு எதிராக திரும்பிய வழக்கு.. ரூ4.25 கோடியை வட்டியுடன் செலுத்த ஐகோர்ட் உத்தரவு! -
இயக்குநர் ஷங்கர் சொத்து முடக்கப்பட்டதற்கு விதிக்கப்பட்ட தடை.. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications