அண்ணா நூற்றாண்டு நூலகத்தை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு
சென்னை: அண்ணா நூற்றாண்டு நூலகத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி வழக்கறிஞர் குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தில் 2010 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் "அண்ணா நூற்றாண்டு நூலகம்" கட்டப்பட்டது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இந்த நூலகம் சரியாக பராமரிக்காமல் உள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து ஓய்வுப்பெற்ற பேராசிரியர் மனோன்மணி என்பவர் ஹைகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் கடந்த திமுக ஆட்சிகாலத்தில் கட்டபட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சரியாக பராமரிக்கப்படவில்லை என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முறையான பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் பராமரிப்பு பணிகளில் குறைபாடுகள் உள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் வரும் மார்ச் 10 தேதிக்கு பிறகு நூலகத்தில் ஆய்வு செய்ய வழக்கறிஞர் குழுவுக்கு உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications