ஈரோடு அருகே விருப்பப்படி பறந்த அழகு மயில்.. மின் கம்பியில் மோதி கிணற்றில் விழுந்து பலி
மின்கம்பியில் மோதிய மயில் பரிதாபமாக உயிரிழந்தது.
Recommended Video
ஈரோடு: ஈரோடு அருகே விருப்பம்போல் சுற்றித்திரிந்த மயில் ஒன்று, மின் கம்பியில் மோதி கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.
ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மயில்கள் உள்ளன. தேசிய பறவையான மயில் பாதுகாக்கப்பட்டு வருவதால் இவற்றின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விளைநிலங்களை மயில்கள் சேதப்படுத்துவதாக விவசாயிகள் புகார் தெரிவித்த போதும் இதனை கட்டுப்படுத்த இயலவில்லை. கிராம பகுதிகளில் சுற்றிதிரிந்த மயில்கள் தற்போது நகர பகுதிகளுக்குள்ளும் ஊடுருவ தொடங்கியுள்ளது.
இந்நிலையில் ஈரோடு இடையங்காட்டு வலசு பகுதியில் சுற்றி திரிந்த மயில் ஒன்று பறக்கும் போது மின்கம்பியில் மோதி அருகில் இருந்த கிணற்றில் விழுந்தது. 60 அடி ஆழமுள்ள கிணற்றில் 10 அடிக்கு தண்ணீர் இருந்தது. உயிருக்கு போராடிய ஒன்றரை வயதுடைய மயிலை கண்ட அப்பகுதியினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ பகுதிக்கு வந்த தீயணைப்பு துறையினர் மயிலை மீட்டனர். ஆனால் அதற்குள் மயில் உயிரிழந்தது. இதனை தொடர்ந்து மயிலை பிரேத பரிசோதனை செய்த வனத்துறையினர் அதனை பிரேத பரிசோதனை செய்து வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் அடக்கம் செய்தனர்.