தமிழக அரசை கண்டித்து போராட்டம்.. திடீரென ஒத்திவைத்தது ஓ.பி.எஸ் தரப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக அரசை கண்டித்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பு நடத்த இருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசை கண்டித்து ஆகஸ்ட் 18ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று நிருபர்களிடம் பேசிய ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:

வரும் 19ம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா குறித்த ஆலோசனை நடத்த உள்ளோம். எனவே, அரசுக்கு எதிராக அறிவித்திருந்த போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.
ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியது வரவேற்கதக்கது. அரசுக்கு எதிரான போராட்டம் குறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
அரசியலுக்கு நடிகர் கமல்ஹாசன் வந்தால் வரவேற்போம். அரசியலுக்கு கமல் வந்து கருத்துகளை கூறட்டும்.












Click it and Unblock the Notifications