ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிப்பு...விரைவில் இடைத்தேர்தல் ?

சென்னை ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் இன்று வெளியிட்டுள்ளார்.

2016ம் ஆண்டு சட்டசபை பொது தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் ஆர். கே.நகரில் போட்டியிட்டார் ஜெயலலிதா. அவரை எதிர்த்து பெண் வேட்பாளர்கள் பலரையும் எதிர் கட்சியினர் களமிறக்கினர். எனினும் ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வரானார்.

The R.K. nagar Assembly constituency has been notified as vacant

5 மாத காலத்திற்குள் அதாவது செப்டம்பர் 22ம் தேதி அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 75 நாட்கள் சிகிச்சை பெற்றும் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி காலியாக இருந்தது.

இந்நிலையில் ஜெயலலிதா மறைவை அடுத்து ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் இன்று அறிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பின் ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு தொகுதியில் எம்.எல்.ஏ மரணமடைந்தால், அந்த தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடைபெற வேண்டும். அதன்படி விரைவில் ஆர். கே. நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+