ஏர்செல் சேவை பாதிப்புக்கு என்ன காரணம்? தீர்வு என்ன?
Recommended Video

சென்னை: ஏர்செல் செல்போன் நிறுவன சேவை கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது ஏன் என்ற காரணம் வெளியிடப்பட்டுள்ளது.
ஏர்செல் செல்போன் நிறுவன சேவை கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். கோவையிலுள்ள தலைமை அலுவலக்திதல் நேற்று வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டயது.
சில தினங்களாக, தமிழகம் உட்பட நாடு முழுவதும், பல இடங்களில், ஏர்செல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதுதான் இந்த கொந்தளிப்புக்கு காரணம்.

நிதி பிரச்சினை
அந்நிறுவனத்தின், தென் மாநில தலைவர் சங்கரநாராயணன் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: நாங்கள், குறிப்பிட்ட ஒரு தனியார் நிறுவனத்தின், தொலைத்தொடர்பு கோபுரங்களை பயன்படுத்துகிறோம். இரு தரப்புக்கு இடையே நிதி தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளதால், அவர்கள் திடீரென செல்போன் டவர்களை முடிவிட்டனர். இதனால்தான், சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் பலரும் முயற்சி
பீதி காரணமாக வேறு நிறுவனத்திற்கு மாறும் வசதியை, லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் பெற முயற்சித்து வருகிறார்கள். எனவேதான், சர்வர் தாக்குப்பிடிக்க முடியாமல் செயலிழந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

ஏர்செல் நஷ்டம்
2016 ஜூலை மாதத்தில் ரூ.120 கோடி லாபத்தோடு இயங்கிய ஏர்செல், 2017 ஜூலை மாதத்தில், அதாவது ஒரு வருடத்தில், ரூ.5 கோடி மட்டுமே லாபம் ஈட்டும் நிறுவனமாக சரிவை சந்தித்தது. இதுதான் ஏர்செல் நிறுவனம் சந்தித்த மோசமான காலகட்டம். இதன்பிறகு அதிவிரைவாக ஏர்செல் நிறுவனம் சரிவடைந்தது. 2017 டிசம்பரில், 120 கோடி நஷ்டம் என்று அறிவித்து ஏர்செல்.

என்ன செய்யலாம்
ஏர்செல் வாடிக்கையாளர்கள் வேறு நெட்வொர்க்கிற்கு மாற, ஏர்செல் பயனாளர்களுக்கு MNP கோட் எண் வழங்கப்பட்டு வருகிறது. இந்த எண்ணைப் பெறுவதற்கு, PORT என டைப் செய்து, அத்துடன் உங்கள் மொபைல் எண்ணையும் சேர்த்து டைப் செய்து 1900 என்ற எண்ணிற்கு அனுப்பலாம்.

ஆதார் அட்டையுடன் போங்கள்
அந்த எண்ணை அருகில் உள்ள மொபைல் கடைகளில் உங்கள் ஆதார் அட்டையுடன் சென்று கொடுத்து, நெட்வொர்க்கை மாற்றிக்கொள்ளலாம். இதற்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications