ஜெயலலிதா மரணம் குறித்து இன்று விசாரணையை தொடங்குகிறார் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி
சென்னை ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி இன்று விசாரணையை தொடங்குகிறார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி இன்று விசாரணையை தொடங்கினர்-வீடியோ
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி இன்று விசாரணையை தொடங்குகிறார்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைத்து கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது.

மூன்று மாதத்தில் விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் விசாரணைக்குழு தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி அண்மையில் பொறுப்பேற்றார்.
விசாரணை நடைபெறும் அலுவலகம் சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்துக்கு கடந்த வாரம் நீதிபதி ஆறுமுகசாமி நேரில் பார்வையிட்டார். இந்நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி இன்று தனது விசாரணையை தொடங்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications