For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொலைகார இலங்கை தூதரகத்தை இழுத்து மூடுக... அதிகாரிகளை வெளியேற்றுக- மீனவர் அமைப்புகள் கொந்தளிப்பு

தமிழக மீனவரைப் படுகொலை செய்த கொலைகார இலங்கையின் தூதரகத்தை இழுத்து மூட வேண்டும் என்று மீனவர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

By Mathi
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: தமிழகத்தில் உள்ள கொலைகார இலங்கை அரசாங்கத்தின் தூதரகத்தை மூட வேண்டும் என்றும் இலங்கை தூதரக அதிகாரிகளை உடனே நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் மீனவர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

கச்சதீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது நேற்றிரவு இலங்கை கடற்படை கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பிரிட்சோ என்ற மீனவர் உயிரிழந்தார்.

The Srilankan Embassy in TN should be closed

இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கொலைகார இலங்கை அரசின் தூதரகத்தை தமிழகத்தில் இழுத்து மூட வேண்டும் எனவும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் இலங்கை தூதரக அதிகாரிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதை நிறுத்திவிட்டு உடனே நாடு கடத்த வேண்டும் என்றும் மீனவர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

English summary
The Srilankan High commissioners should be evicted and embassy shoul be closed, demands Fishermen Association.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X