4 டிஎம்சி காவிரி நீரையும் தராவிட்டால் கர்நாடக அரசை கலையுங்கள்-அய்யாக்கண்ணு ஆவேசம்
நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத கர்நாடக ஆட்சியை கலையுங்கள் என அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
Recommended Video

தஞ்சை: தமிழகத்துக்கு 4 டி.எம்.சி. நீர் தர உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது என விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை என்றால் கர்நாடகத்தில் ஆட்சியை கலைக்க வேண்டும் எனவும் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, செயல்திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு மேலும் கூடுதல் அவகாசம் கேட்டதிற்கு பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனங்களையும், கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

அதன்படி, விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்துக்கு 4 டிஎம்சி நீர் தர உத்தரவிட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாக கூறினார்.
உச்சநீதிமன்றம் தீர்ப்புப்படி தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு தண்ணீர் தர வேண்டும். அப்படி நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை என்றால் கர்நாடக அரசை கலைக்க வேண்டும் என அய்யாக்கண்ணு ஆவேசத்தோடு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications