ஜல்லிக்கட்டுக்கு தடை போடுவதா?: மதுரை ஆதீனம் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்த பிராணிகள் நல வாரிய நடவடிக்கைக்கு மதுரை ஆதீனம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரம்,அலங்காநல்லூர்,பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

the statement issued by Madurai Adheenam

இதுகுறித்து மதுரை ஆதீனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

பிராணிகள் நல வாரியம் என்றால் என்ன? தமிழகத்தில் இருந்து தினசரி லாரிகளில் பசு மாடுகள், எருமை மாடுகள், காளை மாடுகள் இவைகளை சித்ரவதைக்கு உள்ளாக்கி, கேரளாவுக்கு கொண்டு செல்கிறார்களே இதை தடுத்து நிறுத்தியிருக்கலாமே?

அப்படிப்பட்ட கால்நடைகளை, மனிதாபிமானமே இல்லாமல் கொன்று குவித்து நாட்டின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான மாட்டுக் கறிக்கடைகள் உள்ளனவா? அந்த கடைகளுக்கு முன்புறம் மாட்டு இறைச்சிக்கடை என பெயர் பலகைகள் வைத்திருக்கிறார்களே? இது பிராணிகள் நல வாரியத்துக்கு தெரியாதா?

உண்மையிலேயே இந்த வாரியத்திற்கு அக்கறை இருக்குமேயானால் இவைகளை தடை செய்திருக்கலாமே? அப்படி செய்திருந்தால் பிராணிகள் நல வாரியம் என்னும் பெயர் பொருத்தமாக இருந்திருக்கும். இவைகளை விட்டு விட்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்திட வழக்கு போடுவது எந்த வகையில் நியாயம்? இவ்வாறு மதுரை ஆதினம் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+