தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது - அனல் பறக்கும்
3 நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் தமிழக சட்டசபை இன்று கூடியுள்ளது. எதிர்கட்சியினர் அனலை கிளப்ப திட்டமிட்டுள்ளனர்.
Recommended Video

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியுள்ளது. காவிரி பிரச்னை, குரங்கணி தீ விபத்து, சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து சட்டசபையில் பிரச்சினையை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 15ம் தேதி கூடியது. அப்போது, தமிழக அரசு 2018-2019ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையை எதிர்க்கட்சிகள் ஒட்டு மொத்தமாக புறக்கணித்தன. பட்ஜெட் குறித்து அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்துள்ளன.

தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபைக் கூட்டம் இன்று கூடியுள்ளது. பேரவை கூடியதும் முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 2018-2019ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் மீது பொது விவாதம் தொடங்கியது
தினமும் காலை 10 மணிக்கு கேள்வி நேரம் இருக்கும். ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பட்ஜெட் குறித்து பேசுவார்கள். பட்ஜெட் கூட்ட தொடரின் கடைசி நாளான மார்ச் 22ம் தேதி 2018-2019ம் ஆண்டின் முன்பண மானிய கோரிக்கைகள் பேரவை முன் வைக்கப்படுகிறது.
2017-2018-ம் ஆண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பட்டு துணை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் இன்றி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.
அதைத்தொடர்ந்து 2018-2019ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் மீது பொது விவாதம் நடைபெறுகிறது. அப்போது எதிர்க்கட்சி தலைவர்கள் பேசுவார்கள். அதைத்தொடர்ந்து பட்ஜெட் பற்றிய விவாதத்துக்கு முதல்வர் பதில் அளிப்பார் என்று கூறப்படுகிறது.
அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் வருவாய் பற்றாக்குறையும், கடன் சுமையும் அதிகரித்தபடி உள்ளது. அரசின் நிதி நிலைமை மோசமாக உள்ளது. இந்த சூழ்நிலையிலும் இலவச திட்டங்கள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இது குறித்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பேச திட்டமிட்டுள்ளனர்.
காவிரி பிரச்னை, குரங்கணி தீ விபத்து, சட்டம் ஒழுங்கு பிரச்னை, பெண்களுக்கு எதிரான வன்முறை, குடிநீர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பி புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
குரங்கணி தீ விபத்து குறித்து எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications