குப்பை போல் லாரியில் இருந்து கொட்டப்பட்ட காட்டு மாடு.. கதறி துடித்து பலி.. சேலத்தில் சோகம்
சேலம் அருகே லாரியில் இருந்து கவிழ்க்கப்பட்ட காட்டு மாடு அந்த இடத்திலேயே கத்தி உயிரிழந்தது.
Recommended Video

சேலம்: அருகே லாரியில் இருந்து கவிழ்க்கப்பட்ட காட்டு மாடு அந்த இடத்திலேயே கத்தி உயிரிழந்தது. காட்டு மாடு உயிரிழப்புக்கு வனத்துறையே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சேலம் ஏற்காடு மலையில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன் ஒரு காட்டுமாடு, மலை அடிவாரமான கன்னங்குறிச்சி மூக்கனேரி பகுதிக்கு வந்தது. அங்குள்ள அண்ணாமலை என்பவரது விவசாய தோட்டத்திற்குள் புகுந்து, அங்குமிங்கும் ஓட்டம் பிடித்தது.
இதை பார்த்த அப்பகுதி மக்கள், காட்டுமாட்டை விரட்ட பட்டாசுகளை வாங்கி வெடித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த சேலம் வனத்துறையினரும் வந்து, காட்டுமாட்டை மீட்டு வனத்தில் விட நடவடிக்கை எடுத்தனர்.

காட்டு மாட்டிற்கு மயக்க ஊசி
தொடர்ந்து, 2 நாட்களாக சரியாக உணவு உட்கொள்ளாமல், மிரண்டு ஓடியதால், காட்டுமாடு சோர்வடைந்தது. 3வது நாளான நேற்று, வனவிலங்குகள் மருத்துவர் மனோகரன், துப்பாக்கி மூலம் காட்டுமாட்டிற்கு மயக்க ஊசி போட்டார்.

குப்பை போல் கொட்டப்பட்ட வீடு
பின்னர், ஒரு லாரியில் ஏற்றி ஏற்காட்டு மலைக்கு கொண்டுச் சென்றனர். ஏற்காடு வழுக்குபாறை பகுதிக்கு சென்றதும், காட்டுமாட்டை அப்படியே குப்பையை கொட்டுவது போல் கொட்டிவிட்டனர்.

வவலியால் துடித்து கதறியது
இதனால், மிக சத்தமாக கத்தி கதறியது காட்டுமாடு. பின்னர், எழுந்திரிக்க முடியாமல் வலியால் துடித்தது அந்த மாடு. உடனே, சிகிச்சை அளிக்கும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டனர். ஆனால், காட்டுமாடு பரிதாபமாக இறந்தது.

அங்கேயே புதைத்தனர்
இதன்பின், அங்கேயே சேலம் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் தேவேந்திரன் தலைமையில் மருத்துவக்குழுவினர் பிரேதப்பரிசோதனையை செய்தனர். பின்னர், காட்டுமாட்டை அந்த பகுதியில் புதைத்தனர்.

வனத்துறையே காரணம்
காட்டு மாட்டை வனத்துறையினர் குப்பையை கொட்டுவது போல் கொட்டியதே அது இறந்ததற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். காட்டுமாட்டின் சாவுக்கு காரணமான வனத்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications