நாகர்கோவில்: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் மாடியிலிருந்து குதித்து தற்கொலை
நாகர்கோவிலில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
Recommended Video

நாகர்கோவில்: தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் ஒருவர் 5-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த கோட்டாரை சேர்ந்தவர் ஐயாவு. இவரது மனைவி நித்யா. இவர் கடந்த சில தினங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில், வயிற்று வலி கரணமாக கோட்டாரில் உள்ள லஷ்மி என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை 5வது மாடியிலிருந்த தமது அறையை விட்டு திடீரென ஓடி வந்த நித்யா, ஜன்னல் வழியாக குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், நித்யாவுக்கு ஐயாவு இரண்டாவது கணவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் நித்யாவுக்கு குழந்தை இல்லாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் நித்யாவின் தற்கொலையில் மர்மம் நீடிப்பதால், போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications