நாகர்கோவில்: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் மாடியிலிருந்து குதித்து தற்கொலை
நாகர்கோவிலில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
Recommended Video

நாகர்கோவில்: தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் ஒருவர் 5-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த கோட்டாரை சேர்ந்தவர் ஐயாவு. இவரது மனைவி நித்யா. இவர் கடந்த சில தினங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில், வயிற்று வலி கரணமாக கோட்டாரில் உள்ள லஷ்மி என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை 5வது மாடியிலிருந்த தமது அறையை விட்டு திடீரென ஓடி வந்த நித்யா, ஜன்னல் வழியாக குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், நித்யாவுக்கு ஐயாவு இரண்டாவது கணவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் நித்யாவுக்கு குழந்தை இல்லாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் நித்யாவின் தற்கொலையில் மர்மம் நீடிப்பதால், போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications