கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரி முதல்வருடன் திரையரங்க உரிமையாளர்கள் சந்திப்பு
கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரி முதல்வருடன் திரையரங்க உரிமையாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சென்னை: கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் திரையரங்க உரிமையாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
டிஜிட்டல் ஒளிபரப்பு, உள்ளாட்சி சேவை வரி விதிப்புக்கு எதிராக, தமிழ் திரை உலகினர் தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக, தமிழக அரசு மற்றும் திரைத் துறைனர் இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், இறுதி முடிவு எட்டப்படவில்லை. இருப்பினும் தமிழ் திரை அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி வந்தன.

ஆனால் தமிழக அரசின் சார்பில், பேச்சுவார்தைக்கு அழைப்பு விடுக்கப்படாததால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், குறிப்பிடும்படியாக, தமிழ்திரைப்படங்கள் வெளியிடப்படாது என்று அறிவிக்கப்பட்டது.
டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்கு எதிராகவும், உள்ளாட்சி கேளிக்கை வரிக்கு எதிராகவும், தமிழ் திரையுலகம் நடத்திவரும் போராட்டத்தால், தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் திரையரங்குகள் கடந்த வெள்ளிக்கிழமை மூடப்பட்டன.
இந்நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். அப்போது 8 % கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும், ஆண்டுக்கு ஒரு முறை திரையரங்க உரிமத்தை புதுப்பிக்கும் முறையை 3 ஆண்டுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications