ஜெ. மறைவால் புறக்கணிக்கப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதி.. 4 நாட்களாக குடிநீர் சப்ளையில்லை.. மக்கள் மறியல்
ஜெயலலிதா மறைந்து ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், அவரது சட்டசபை தொகுதியான ஆர்.கே.நகர், ஆட்சியாளர்களால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டுள்ளது.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சட்டசபை தொகுதியான சென்னை, ஆர்.கே.நகர் அரசால் கைவிடப்பட்டுவிட்டதோ என்று கேள்வி எழுப்புகிறார்கள் அப்பகுதி மக்கள்.
வர்தா புயல் கடந்து சென்றபிறகு 4 நாட்களாகியும், ஆர்.கே.நகரில் இன்னமும் முழுமையாக மின்சார சப்ளை இல்லை. குடிநீர் வினியோகமும் கிடையாது.

வெறுத்துப்போன மக்கள் சாலை மறியல் நடத்தியனர். பெண்கள் காலி குடங்களோடு சாலையில் அமர்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட, இந்திரா என்ற பெண்மணி இதுகுறித்து கூறுகையில், ஜெயலலிதாவின் தொகுதியாக ஆர்.கே.நகர் மாறிய பிறகு பொதுப் பிரச்சினைக்காக மக்கள் நடத்தும் முதலாவது போராட்டம் இதுதான். முதல்வராக இருந்தவர் தொகுதியிலேயே 4 நாட்களாக தண்ணீர் சப்ளை இல்லை. குடிக்கவோ, கழிவறைக்கு பயன்படுத்தவோ தண்ணீர் இன்றி மக்கள் தவிக்கிறார்கள் என்றார்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஆர்.கே.நகர் அவரது செல்லப் பிள்ளையாக கருதப்பட்டது. கடந்த வருடம் வெள்ள சேதம் ஏற்பட்டபோது கூட வேறு எந்த பகுதிக்கும் செல்லாத ஜெயலலிதா, ஆர்.கே.நகர் மட்டுமே சென்று மக்களை பார்வையிட்டார்.
ஜெயலலிதா மறைந்து ஒரு வாரம்தான் முடிந்துள்ள நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி அனாதையாக விடப்பட்டுள்ளதாக குமுறுகிறார்கள் தொகுதியில் வசிக்கும் மக்கள்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications