தேனாம்பேட்டையில் 2 மாடிக் கட்டிடம் சரிந்து விழுந்ததில் 20 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு
சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள 2 மாடி கட்டிடம் திடீரென சரிந்து விழுந்ததில் 20 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
கட்டிடம் திடீரென்று சரிந்ததில் அதிர்ச்சி அடைந்த வாடகைதாரர்கள் அலறி அடித்து வெளியே ஓடினர். தேனாம்பேட்டை பக்தவச்சலம் தெருவில் வேலன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
தரை தளம் உள்பட 2 தளத்திலும் வாடகைதாரர்கள் வசித்து வருகின்றனர். தற்போது, அந்த வீட்டில் தொட்டி அமைக்கும் பணி நடந்து வருகிறது. வீட்டு வளாகத்திற்கு உள்ளேயே இந்த பணி நடந்து வந்தது. இதற்காக வீட்டு வளாகத்தில் இருந்து லாரி லாரியாக மண் அள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2 மாடி கட்டிடம் நேற்று மாலை திடீரென சரிய தொடங்கியது. இதனால், வீட்டில் இருந்த வாடகைதாரர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். தகவலறிந்து தேனாம்பேட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பாதுகாப்பு கருதி இந்த கட்டிடம் விரைவில் இடிக்கப்படும் என்று கூறப்படுகிறது. எனினும் யாருக்கும் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications