மாமன், மச்சானெல்லாம் வந்து துடைப்பத்துல அடி வாங்கிக்கோ...தேனியில் விநோதத் திருவிழா -வீடியோ
தேனி மாவட்டம் மறவப்பட்டி என்னும் ஊரில் நடக்கும் முத்தாலம்மன் சித்திரைத் திருவிழாவில் மாமன், மச்சான் முறைகொண்டவர்கள் ஒருவரையொருவர் துடைப்பத்தால் அடித்துக்கொள்ளும் நிகழ்ச்சி பல ஆண்டுகளாக நடைபெற்று வருக
தேனி: தேனி ஆண்டிப்பட்டி அருகேயுள்ள மறவப்பட்டி என்ற ஊரில் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் மாமன் மச்சான் முறைகொண்டவர்கள் ஒருவரையொருவர் துடைப்பத்தால் அடித்துக்கொள்ளும் விநோத நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகேயுள்ளது மறவப்பட்டி என்னும் சிற்றூர். இங்கு ஆண்டுதோறும் முத்தாலம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த திருவிழாவின் ஒரு பகுதியாக மாமன், மச்சான் உறவுமுறைகள் கொண்டவர்கள் ஒருவரையொருவர் சந்தோஷத்துடன் துடைப்பத்தில் அடித்துக்கொள்கின்றனர்.

துடைப்பத்தில் சேறு, சாணி ஆகியவற்றில் தோய்த்து ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியுடன் அடித்துக்கொண்டால் ஆண்டாண்டு காலமாக நிலவி வரும் மாமன், மச்சான் குடும்ப பகை வராது என்ற காரணத்துக்காக அடித்துக்கொள்கின்றனர். சிலர் தங்களாகவே முன் வந்து மாமன், மச்சான் முறையுள்ளவர்களிடம் அடிவாங்கி திருப்தியுடன் செல்கின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு விநோத திருவிழாக்கள் நடந்து வருகிறது. எனினும்,இந்த துடைப்ப அடி திருவிழா விநோதமாகவும் வேடிக்கையாகவும் உள்ளது.












Click it and Unblock the Notifications