For Daily Alerts
Just In
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பு: தேனி இளைஞர் தீக்குளித்து மரணம்!!
தேனி: ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தீக்குளித்த தேனியைச் சேர்ந்த ரமேஷ் என்ற இளைஞர் பரிதாபமாக மரணமடைந்தார்.
விலங்குகள் நல அமைப்பால் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்தத் தடையை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்தன.
இந்நிலையில் தேனி ஜவஹர் நகரைச் சேர்ந்த ரமேஷ் என்ற இளைஞர் நேற்று காலை கம்பம் சாலையில் ஒரு திரையரங்கு முன்பாக திடீரென தீக்குளித்தார்.
இதையடுத்து ரமேஷ் தேனி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார். ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டதால் மனமுடைந்து ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
Ramesh of Theni on Friday succumbed to the burn injuries he suffered during a self-immolation bid against Jallikattu ban.