தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, "வங்கக்கடலில் இருந்து ஈரப்பதம் கலந்த காற்று வீசி வருவதால் அடுத்த 24 மணி நேரத்தை பொருத்தவரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொருத்தமட்டில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகர் மற்றும் புறநகர் பகுதியில் ஆங்காங்கே மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேர நிலவரப்படி, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் அதிகபட்சமாக 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
கேளம்பாக்கம், பூண்டியில் 7 செ.மீ மழையும், திருவாலங்காட்டில் 6 செ.மீ. மழையும், போளூர், சங்கராபுரம், பாபநாசம், வந்தவாசி, செய்யூர் மற்றும் மணிமுத்தாறு ஆகிய இடங்களில் 5 செ.மீ மழையும் பாதிவாகி உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications