For Quick Alerts
For Daily Alerts
Just In
எடப்பாடி அரசு நீடிக்குமா.. ஜி.கே.வாசனுக்கு வந்த சந்தேகம்!
தமிழகத்தில் நடைபெற்று வரும் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நீடிக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்று த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
சென்னை: தமிழகத்தில் சசிகலாவின் ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி நீடிக்குமா? என்று சந்தேகம் எழுந்துள்ளதாக ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
மக்களின் விருப்பத்துக்கு மாறாக நடந்து வரும் ஆட்சி நீடிக்குமா நீடிக்காதா என்று சந்தேகம் உள்ளது என்றும் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில், மக்கள் எதிர்ப்பையும் மீறி தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி நடப்பது வேதனைக்குரியது.
மக்களின் கருத்துகளை கேட்காமல் சசிகலா தரப்பு எம்எல்ஏ-க்கள் அவரது ஆதரவாளரான எடப்பாடிக்கு ஆதரவளித்து அவரை முதல்வராக்கியுள்ளனர்.
மக்கள் ஏற்றுக் கொள்ளாத ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது. இந்த ஆட்சி நீடிக்குமா? நீடிக்காதா என்ற சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார் வாசன்.
Comments
English summary
There is a doubt about ADMK regime whether Palanisamy's regiume will continue or not, asks G.K.Vasan.
Story first published: Thursday, March 2, 2017, 12:31 [IST]