மக்கள் நலக் கூட்டணி தலைவர்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை - வைகோ
மக்கள் நலக் கூட்டணி தலைவர்களிடையே கருத்து முரண்பாடுகள் ஏதும் இல்லை எனவும் ஒற்றுமையுடன் இருக்கிறோம் எனவும் அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை: மக்கள் நலக் கூட்டணி தலைவர்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை என அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக திமுக கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் மக்கள் நல கூட்டணியில் உள்ள கட்சிகள் பங்கேற்காது என அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ முன்னதாக தெரிவித்திருந்தார். மேலும் திமுக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது ஏமாற்று வேலை. இது ஒரு நாடகம் எனவும் அவர் கூறினார்.

இந்த விவகாரத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் இடையே கடும் மோதல் உருவாகியதாக கூறப்பட்டது. இருப்பினும் திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்கான முயற்சிகளை விசிக எடுத்து வந்தது. இதற்காக கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினர் திருமாவளவன்.
இதனிடைய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும் சந்தித்து ஆலோசனை நடத்தினர் திருமாவளவன். இறுதியில் கூட்டணியில் உள்ள பெரும்பான்மையின் அடிப்படையில் திமுக அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த நிலையில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறியதாவது: வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு விரைந்து மேற்கொள்ள எனவும், காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீபாவளிக்கு பின்னர் முடிவு செய்யப்படும் எனவும் கூறினார்.
மேலும், மக்கள் நலக் கூட்டணி இடைத்தேர்தலில் போட்டியிட போவதில்லை என ஏற்கனவே அறிவித்துள்ளோம். மக்கள் நலக் கூட்டணி தலைவர்களிடையே எந்த கருத்து முரண்பாடுகள் ஏதும் இல்லை. ஒற்றுமையுடன் இருக்கிறோம். இவ்வாறு வைகோ கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications