காவிரி வழக்கு: விவசாயிகள் சாவதைப் பற்றி கவலை இல்லாத அரசுகள் இருந்து என்ன பயன்? துரைமுருகன்
விவசாயிகள் சாவதைப் பற்றி கவலை இல்லாத அரசுகள் இருந்து என்ன பயன் என்று துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video

சென்னை: தமிழக விவசாயிகள் காவிரி விவகாரத்தில் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் நிலையில், அதைப்பற்றி கவலைப்படாத மத்திய மாநில அரசுகள் இருந்து என்ன பயன் என்று திமுகவின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் மே 14ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இந்தத் தீர்ப்பால் தமிழக விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கூறுகையில், நீதிமன்றம் என்பது அரசியல், தேர்தல் போன்றவற்றிற்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும். ஆனால், உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு இந்த விவகாரத்தில் துணை போகிறது.
காவிரி விவகாரத்தில் மேலும் கால அவகாசம் கொடுப்பது தமிழக விவசாயிகளை முழுமையாக அழித்து ஒழிக்கும் செயல். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் துணைபோகிறது.
ஆனால், இதை எல்லாம் பார்த்துக்கொண்டு மாநில அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. விவசாயிகள் செத்துக்கொண்டிருக்க அதைப்பற்றி கவலைப்படாத மத்திய, மாநில அரசுகள் இருந்து என்ன பயன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், உச்சநீதிமன்றத்தின் மீது தான் பெருமதிப்பு கொண்டிருந்ததாகவும், ஆனால் கடந்த காலத்தில் அங்கிருந்து வரும் செய்திகள் அதன் மாண்பை குலைத்துவிட்ட நிலையில், இந்த தீர்ப்பு நீதித்துறைக்கு தலைகுனிவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications