ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை விமர்சிக்க அதில் ஒன்றும் இல்லை: ஜி. கே. வாசன்
சென்னை: ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து விமர்சிக்க அதில் ஒன்றும் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் காமராஜரின் முழு உருவ வெண்கல சிலை மரற்றும் மறைந்த காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியின் மார்பளவு வெண்கல சிலை ஆகியவை நாளை திறந்து வைக்கப்பட உள்ளன.

இந்நிலையில் சிலை திறப்பு விழா ஏற்பாடுகளை முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் பார்வையிட்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை தீர்ப்பாக மட்டுமே பார்க்க வேண்டும். அதை பற்றி விமர்சிக்க ஒன்றும் இல்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது காவல் துறையினர் மற்றும் அரசு அதிகாரிகளின் கடமை ஆகும். வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதாரண மக்கள் பயமின்றி இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications