டிடிவி.தினகரனுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: சிவி சண்முகம் அந்தர் பல்டி!
டிடிவி தினகரனுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அமைச்சர் சிவி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னை: டிடிவி தினகரனுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அமைச்சர் சிவி.சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும் டிடிவி தினகரனை நாங்கள் ஒதுக்கிவிட்டோம் என்றும் அவர் கூறினார்.
அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளரும் சசிகலாவின் அக்காள் மகனுமான டிடிவி தினகரன் இரட்டை இலைச்சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த புகாரில் நேற்று நள்ளிரவு டெல்லி போலீசால் கைது செய்யப்பட்டார். இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இந்நிலையில் எடப்பாடி அணியினருக்கும் ஓபிஎஸ் அணியினருக்கும் இடையே இன்று பேச்சு வார்த்தை நடைபெறும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் சிவி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார்.

இரு அணிகளும் பேச்சுவார்த்தை
அப்போது இன்று நல்ல நாள் என்பதால் வைத்திலிங்கம் தலைமையிலான குழு ஒபிஎஸ் அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அவர் கூறினார்.மேலும் டிடிவி தினகரன் கைது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

எந்த சம்பந்தமும் இல்லை
அதற்கு பதிலளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், டிடிவி தினகரனுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார். நாங்கள் டிடிவி தினகரனை கட்சியை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டோம் என்றும் அவர் கூறினார்.

அவரே சந்தித்து கொள்வார்
டிடிவி தினகரன் மீதனா வழக்கை அவர் சட்டப்படி சந்தித்துக்கொள்வார் என்றும் சிவி.சண்முகம் கூறினார். மேலும் ஓபிஎஸ் அணியினரின் நிபந்தனை குறித்த கேள்விக்கு அதுகுறித்து அமர்ந்து பேசுவோம் என்றும் பேச்சுவார்த்தை பிறகே எதையும் அறிவிப்போம் என்றும் அமைச்சர் சிவி.சண்முகம் கூறினார்.

அம்மா என புரோமோஷன் கொடுத்தவர்
அண்மையில் சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் அறிவித்த போது டிடிவி தினகரனால் அதிமுகவுக்கு ஆபத்து உள்ளது என கூறியவர் சி.வி.சண்முகம். சசிகலாவுடனான மோதலின் போது ஓபிஎஸை கருங்காளி என்று, சசிகலா சின்னம்மா அல்ல அம்மா என புரோமோஷன் கொடுத்தவரும் இந்த சிவி.சண்முகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications